பிற மொழியாக்கம் தமிழுக்குத் தரும் ஊக்கம்

 

 

 

 

 

 

 

 

நா. நந்திவர்மன்,பொதுச்செயலாளர் திராவிடப்பேரவை

“177 வருடக் கருவூலம் ரோமன் ரோலண்டு நூலகம்” என்ற தலைப்பில்
9 அக்டோபர் 2004‟ நியு இந்தியன் எக்சுபிரசு‟ ஆங்கில நாளேட்டில் நான்
எழுதுகையில் 338304 நூல்கள் அந்நூலகத்தில் அதில் இருந்தன. அதில் 45000 நூல்கள் சிதலமடைந்துவிட்டன. சில புதிய நூல்கள் அவற்றுள் அழிந்தவைக்கு மாற்றாக வாங்கப்பட்டிருந்தன. புதுச்சேரியைச் சுற்றி உள்ள 54 அரசு நூலகங்களில் 430000 நூல்கள் இருந்தன. அதில் 35000 சீரழிந்துள்ளன” என எழுதி இருந்தேன்.

காலம் காட்டும் கைவரிசையில் இருந்து மிச்சமிருக்கும் நூல்கள் அழிவதற்குள் இந்த ஒரு நூலக நூல்களை ஆய்வு செய்து மொழிபெயர்ப்புகள்-மொழி பெயர்ப்பாளர்கள் மட்டுமல்ல புதுவையில் வாழ்ந்தோர் இங்கு வந்த பிற நாட்டறிஞர்கள் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பை பதிவு செய்ய போதிய காலம் வேண்டும். பொறுமை மிக வேண்டும். ஈடுபாடு உள்ள ஆய்வாளர்கள் கண்ணுங் கருத்துமாக இப்பணியில் ஈடுபடல் வேண்டும்.

“இங்கு ஏராளமான பிரெஞ்சு நூல்கள் இருந்தன. விடுதலைக்குப் பிறகு பிரெஞ்சின் இடத்தை ஆங்கிலம் கைப்பற்றியதால் அரிய பல பிரெஞ்சு நூல்கள் கவனிப்பாரற்றுப் போயின. திருமதி ஒய்யோன் ராபர்ட் கெப்லே  அரிய நூற்கள் பட்டியலை அரும்பாடு பட்டித் திரட்டி இருந்தார். புதுச்சேரி அரசு 1960ல் Catalogue General என்ற தலைப்பில் அந்தப் பட்டியலை வெளியிட்டிருந்தது. அந்நூல் மீண்டும் புதுவையில் பதிக்கப்பட்டாக வேண்டும்” என மேற்சொன்ன கட்டுரையில் நான் எழுதி இருந்தேன். ஆய்வுக்கு இதுபோன்ற பட்டியவர்கல் அருந்துணை புரிவன.

புதுச்சேரி அரசுக்கும் நடுவண் அரசுக்கும் சுலை 1-1979 ல் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாக தேசிய ஆவணக்காப்பகம் புதுச்சேரிக்கு வந்தது. பிரெஞ்சுக்காரர்கள் அரிய ஆவணங்களைப் பாதுகாப்பதில் நமக்கு முன்னோடிகள்.  பிரெஞ்சியர் கையாண்ட பாதுகாப்பு முறையை Archives Between Glasses என ஆங்கிலத்தில் சொல்லலாம். கண்ணாடிக்கிடையே ஆவணங்கள் கிழிபடாமல் பாதுகாக்கும் முறைப்படி பிரெஞ்சு தமிழ் தெலுங்கு இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் ஆனந்தரங்கப்பிள்ளைக்கும் சென்னை வணிகர் சம்புதாஸ் சங்கரதாசுக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்து கண்ணடிகளுக்கிடையே வைக்கப்பட்டு மூடி வெளியே எடுத்திடாமல் படித்தறியும் வண்ணம் உள்ளன 1701-1860க்கிடையே ஆன இந்த ஆவணங்களில் குறிப்பாக ஆனந்தரங்கரின் கடிதங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் வரலாறு வெளிப்படும் என ஆகத்து 20-2005 நியு இந்தியன் எக்சுபிரசு ஆங்கில நாளேட்டில் Treasure Trove of History என்ற தலைப்பில் நான் எழுதினேன்.

இந்த தேசிய ஆவணக் காப்பகத்தில் திருமூலரின் நாடி சாத்திரம் யாபருங்கலம் தத்துவக் கட்டளை பட்டினத்தார் மடல் வைத்திய சாத்திரம் அகத்தியர் நூறு நாதாந்தசாரம் ஆகிய அரிய நூல்கள் ஓலைச் சுவடிகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடகத் தந்தை  சங்கரதாஸ் சுவாமிகள் (1867-1922) எல்லா இசை மரபுகளையும் தமிழ்நாடகத்துள் கொண்டு வந்தவர். கிறித்துவப் பாதிரியாரான எட்டுவர்டு பால் மேற்கத்திய பக்திப் பனுவல்களை மேற்கத்திய இசையில் பாடும் வண்ணம் எழுதித் தருமாறு வேண்ட சுவாமிகளும் யாத்தளித்தார்.

“கோபாலகிருண பாரதியின் காலத்தில்தான் 19ஆம் நூற்றாண்டில் கர்நாடக இசையில் இந்துஸ்தானி இசை வடிவங்கள் நுழைந்தன” என முனைவர் அரிமளம் பத்மநாபன் கூறுவார்” “அவர் நந்தன் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியபோது தமிழிசை மரபு புத்தொளி பெற்றது. அவர் வழியிலேயே அவர் கையாண்ட இசை மெட்டுக்களின் தழுவலாக மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் பாடினார். அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் திருப்பாவையையும் திருவெம்பாவையும் தமிழிசை வழக்கில் கொண்டு வந்தார். தமிழிசையை வளர்க்கவும் பரப்பவும் பெருவிழைவு கொண்டிருந்த பாவேந்தர் பாரதிதாசன் தெலுங்குப் பண்டிதர்களின் துணையோடு தியாகராஜரின் கிர்த்தனைகளை தமிழாக்கம் செய்தார். சனி தோடி தேவே ஓ மனசா என தியாகராஜன் அரிகரகாம்போதி ராகத்தில் எழுதிய பாடலை தாதி கூட்டி வாராய் ஓ மனமே” எனப் பாவேந்தர் மொழியாக்கம் செய்ததை” முனைவர் அரிமளம் பத்மநாபன் கூறுவார். இதை Tamil Music Through Ages என்ற தலைப்பில் நியு இந்தியன் எக்சுபிரஸ் நாளேட்டுக்கு 12-பிப்ரவரி-2005ல் நான் எழுதிய கட்டுரையில் பதிவு செய்துள்ளேன்.

பிரெஞ்சு தேசிய கீதத்தை மொழியாக்கம் செய்த மகாகவி பாரதியார் தெலுங்குக் கீர்த்தனைகளைத் தமிழாக்கம் செய்த பாவேந்தர் பாரதிதாசன் என தமிழ்மொழியின் முன்னோடிக் கவிஞர்கள் இருவர் ஆற்றிய பங்களிப்பும் மொழி வளர்ச்சிக்குப் புதுவையின் பங்களிப்பில் அடங்கும். சிறீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் ஏட்டின் வழி மொழியாக்கம் மூலம் தமிழ் வளர்த்தச் சான்றோர் பலராவர்.

 பாவேந்தர் பாரதிதாசன் ஆசிரியராத் திகழ்ந்த சிறீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் பங்குனி 1935 திங்களிதழில் ல்லி என்ற மாபெரும் அங்கிலக் கவிஞனின் கவிதையை எம்.ஜே.ஈ.என். டீ.யு என்பவர் புதவைக்காரர் மொழியாக்கம் செய்துள்ளார்.

 பிரான்சு நாட்டுக் கவிஞர் புளோரியான் எழுதிய கவிதையின் தழுவலாக குருடனும் முடவனும் என்ற பாடலை அதே இதழில் “தமிழணங்கு” ஆசிரியர். புலவர் மு.த.வேலாயுதனார் எழுதியுள்ளார்.

 த்ஸனிதோடி என்ற தியாகராஜ கீர்த்தனத்தின் மொழிபெயர்ப்பும் பங்குனி 1935 கவிதா மண்டலத்தில் வெளியாகி உள்ளது.

ஆங்கிலக் கவிஞன் n~ல்லி எழுதிய பாடலை “என் பக்கத்தில் இன்னோர் இருதயம் இருந்திருந்தால் இனிமையாயிருக்கும்” என்ற தலைப்பில் எம் ஜே.ஈ.நல்பொன் பி.ஏ.எல்.டி தமிழாக்கம் செய்துள்ளார் (சித்திரை 1935 கவிதா மண்டலம்)

“கஸ_ தாரஸபான முஜேசி” என்ற தியாகராஜ கீர்த்தனையை சித்திரை 1985 கவிதா மண்டலம் இதழில் தமிழாக்கம் செய்துள்ளார் பாவேந்தர்.

“யுத்தம் வராதா என்று ஏராளமான போர்க் கருவிகளைச் செய்து குவித்துக் கொண்டு காத்திருக்கின்றனர் ஆயுதத் தொழிற்சாலையினர். அவர்கள் உடனே உலகில் போர் ஒன்று ஏற்பட வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திப்பதாக ஒரு ஆங்கிலக் கவி” எழுதிய பாடலைத் தழுவி யுத்தம் வராதா என்ற தலைப்பில் சங்கு சுப்பிரமணியன் எழுதிய கவிதை கவிதா மண்டலத்தில் வெளியாகியுள்ளது.

பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் பன்மொழிகளில் மொழியாக்கம்
செய்யப்பட்டன. அது பற்றிக் கவிதா மண்டலத்தில் எழுதும் எஸ்.ஆர்.சுப்பிரமணியன் “சுப்பிரமணிய பாரதியார் கவிதா மண்டலம் ஆசிரியர் பாரதிதாசன் சுமார் 20 ஆண்டுகளாக எழுதி வெளியிட்டு வந்துள்ள தமிழ்க்கவிகளில் அநேகம் இங்கிலீ தெலுங்கு முதலிய பாi~ வல்லுநர் தமது பத்திரிகையில் மொழி பெயர்த்து வெளியிட்டு வந்துள்ளார்கள். பாரதிதாசன் முதன் முதலில் பாரதியார் முன்னிலையில் அவர் கட்டளைப்படி எழுதிய சக்திப்பாட்டு ஒன்றை  Bombay Standard என்ற சிறந்த இங்கிலீ~; பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் கே. சீனிவாசன் அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டார்” என்று எழுதியுள்ளார். The Mothers Majesty-Manifestations of Primal Power –என்ற தலைப்பில் அக்கவிதை கவிதா மண்டலத்தில் வெளியாகியுள்ளது.

இச்செய்தி மூலம் “தெலுங்கில்” மொழியாக்கம் செய்யப்பட்ட பாவேந்தர் பாடல்கள் பற்றி அறிகிறோம். ஆய்வாளர்கள் அந்தப் பாடல்களைத் திரட்டித் தொடுக்கும் பணியில் ஈடுபடல் வேண்டும்.

ரூழே தெலீஸ் என்பார் “பிரெஞ்சு தேச மக்களைப் போருக்குக் கிளப்பிய மார்செயேன் என்ற எழுச்சிப் பாட்டானது உலகத்திலேயே கீர்த்தி பெற்றதுவாகும் என்று “தூக்குவீர் கத்தியை” என்ற தலைப்பில் தமிழாக்கியுள்ளார்.

சல்லி ப்ருய்தோம் என்ற பிரஞ்சுக் கவிஞரின் பாடலை வழக்கறிஞரான எஸ்.நடனசபாபதி „ஓர் கனவு‟ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்துள்ளார்.

 ஆங்கிலக் கவிஞன் கீட்ஸ் எழுதிய கவிதையை அழுகுடைப் பொருள் என்ற தலைப்பில் கே. பஞ்சாபகேசய்யர் பி.ஏ.எல்.டி என்ற ஆசிரியர் தமிழாக்கம் செய்தள்ளார்.

 சிறீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் வைகாசி 1935 இதழில் பெண்களைப் பற்றி பெர்னாட்~h என்ற கவிதை வெளியாகி உள்ளது.  பிரஞ்சுக் கவிஞர் விக்தோர் உய்கோ எழுதிய ஏழைகளுக்கு என்ற கவிதையைத் தழுவி பெரும் புலவர் மு.த. வேலாயுதனார் தமிழாக்கம் செய்துள்ளார்.

“அலக லல்ல லாடக நி” என்ற தியாகராஜ கீர்த்தனையை பாவேந்தர்
பாரதிதாசன் தமிழாக்கம் செய்துள்ளார்.

எச். டபிள்யூ லாங்ஃபெல்லோ என்ற ஆங்கிலக்விஞரின் கவிதையை குழந்தைகள் என்ற தலைப்பில் தமிழாக்கிக் கவிதா மண்டலம் வெளியிட்டது.

சிறீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் ஆனி மாதம் 1935 இதழில் “ச்யாம சுந்தராங்க” என்ற தியாகராஜரின் கீர்த்தனையை பாவேந்தர் தமிழாக்கம் செய்துள்ளார்.

பிரெஞ்சுக் கவிஞர் ப்ளோரியான் எழுதிய கவிதையை “செம்மறியாடும் நாயும்” என்ற தலைப்பில் பெரும்புலவர் மு.த. வேலாயுதனார் மொழியாக்கம் செய்துள்ளார்.”

சல்லி புரூய் தொம் என்ற பிரஞ்சுக் கவிஞரின் கவிதையை சிறீ பஸ்தேருக்குக் கடிதம் என்ற தலைப்பில் எஸ். நுடனசபாபதி மொழி பெயர்த்துள்ளார்.

விக்தோர் உய்கோ எழதிய “காதல்” என்ற கவிதையையும் நடனசபாபதி மொழி பெயர்த்துள்ளார்.  கவிதா மண்டலம் : ஆவணி 1935 இதழில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் “நிஜமர்மமுலனு” என்ற தியாகராசர் கீர்த்தனையை தமிழாக்கம் செய்துள்ளார்.

பிரிசோ என்ற பிரெஞ்சுக்கவி 5வயதுச் சிறுவனாக இருந்தபோது விளையாட்டாக நன்றாகப் பாடிக்கொண்டிருந்த வானம்பாடியைச் சுட்டு வீழ்த்தினர். கவிஞரானதும் அதை நினைவு கூர்ந்து வானம்பாடியின் மரணம் என்ற கவிதை இயற்றினார். அதைத் தமிழணங்கு ஆசிரியர் மு.த.வேலாயுதனார் தமிழாக்கம் செய்தார்.

மேக்கெய் என்ற ஆங்கிலப் பாவலன் பாடலைத் தழுவி “எனது நல்ல வலது கரம்” என்ற தலைப்பில் க. புருசோத்தமன் மொழியாக்கம் செய்தார்.

மாபெரும் ஆங்கிலக் கவிஞன் N~க்ஸ்பியர் எழுதிய வெனிசு நகர வணிகன் நாடகத்தின் தமிழ் மொழியாக்கம் தென்னாப்பரிக்கா டர்பன் நகரில் வாழ்ந்த ச. முனிசாமிப் பிள்ளையால் செய்யப்பட்டது. இந்நகரில் என் பாட்டனார் கோ. இராமதாசுப் பிள்ளையும் வாழ்ந்தார். இப்பாடல் சிறீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலத்தில் வெளிவந்ததால் புதுவையின் பங்களிப்பில் இடம் பெறுகிறது.“இரக்கத்தின் சிறப்பு” என்ற தலைப்பில் வெளியாகியது.

ஆந்திரே n~னியேவின் கருத்தைத் தழுவி பெரும் புலவர் மு.த.வேலாயுதனார் “சுதந்திரம்” என்ற தலைப்பில் கவிதை எழுதினார்.

“1851 ஆம் ஆண்டு திசம்பர் 2ம் நாள் மூன்றாவது நெப்போலியன் பிரான்சின் குடியாட்சியை முடியாட்சியாக்கிக் கொண்டு அரசனானான். அப்போது அவன் குடியரசுவாதிகளை நாடுகடத்தி விட்டான். நாடு கடத்தப்பட்டவர்களில் பிரெஞ்சு தேச மகாகவி விக்தோர் உய்கோவும் ஒருவர். அப்போது அவர் நாடுகடத்தப்பட்டவர்களின் வீட்டைப் பற்றி மிக உருக்கமாகப் பாடியதை” பின்னாளில் புதுவைச் சிவம் என்று அறிமுகமான ச. சிவப்பிரகாசம் அந்நாளில் துக்க வீடு என்ற தலைப்பில் பாடியுள்ளார்.

ரோன்சார் என்ற 16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சுக்கவி தாம் காதலித்த ஹெலன் என்பவள் தம்மை விரும்பவில்லை என்பதைத் அறிந்து கவிதையாக கடிதம் எழுதினார். அதன் தமிழாக்கத்தை வழக்கறிஞர் நடனசபாபதி எழுதியுள்ளளார்.

“மனஸா சிறீ ராமச்சந்த்ருனி” என்ற தியாகராஜ கீர்த்தனை கவிதாமண்டலம் இதழாசிரியர் பாரதிதாசனால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மொழியாக்க முன்னோடிகளாக மகாகவி பாரதியாரையும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனையும் பெற்றுப் புகழீட்டிய புதுவை மண்ணில் சிறீ சுப்பிரமணிய பாரதி கவிதாமண்டலம் என்ற ஒரே இதழில் இத்துணை மொழி பெயர்ப்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர். புதுவையில் வெளிவந்த சிற்றிதழ்கள் அனைத்தையும் அலசித் தேடினால் இன்னும் பலரது பங்களிப்பு பாரறியும்.

கேரளப் பெரியார் நாராயணகுரு புதுவையிலும் சிதம்பரத்திலும் வடலூரிலும் சில காலம் இருந்துள்ளார். அவர் சிதம்பரத்தின் அருமை பெருமைகளை வடமொழியில் “சிதம்பரா~;டகம்” என்ற நூலாக யாத்துள்ளார். புதுச்சேரியில் அவர் வேதபுரீசுவரர் மீது தமிழில் வெண்பாக்களால் ஒரு கவிதை நூலை இயற்றியுள்ளார். அந்நூல் மலையாள வரிவடிவத்தில் உள்ளது. ஒரு மலையாள அறிஞர் அதை வாசித்துக் காட்டியபோது தமிழ் வெண்பா என்பது எனக்குத் தெளிவாகியது. இதை மீட்டெடுத்துத் தமிழில் பதிப்பித்தாகல் வேண்டும் நியு இந்தியன் எக்சுபிரசில்  Narayana Guru and Tamil Soil  என்ற தலைப்பில் 13 ஆகத்து 2005ல் நானெழுதிய கட்டுரையில் இதனைப் பதிவு செய்துள்ளேன். மலையாள மொழிக்குரிய வரிவடிவம் புதுச்சேரியையோ இதனை ஒட்டிய தமிழகப் பகுதிகளிலோ இருந்த சமயத்தில் தான் துஞ்சத்து எழுத்தச்சனால் உருவாக்கப்ப்ட்டதாக அந்த மலையாள அறிஞர் என்னிடம் உரையாடுகையில் தெரிவித்து கருத்து ஆய்வு செய்யப்பட்ட வேண்டிய கருத்தாகும்.

“நரம்பிசைக் கருவிகள் அய்யாயிரமாண்டுகளாக இருந்து வந்துள்ளன.
அத்தகு நரம்பிசைக் கருவிகளுள் பழமையானது யாழ். இன்று இலங்கைக்குள் இருக்கின்ற யாழ்ப்பாணத்தில் தான் யாழ் உருப்பெற்றது. யாழ் போன்றதொரு இசைக்கருவியில் இருந்தே மேற்கத்திய இசைக்கருவி “கித்தார்” உருவாகி இருத்தல் வேண்டும். இது போன்ற நரம்பிசைக் கருவிகள் இலங்கையில் ஈரானில் நடுவண் ஆசியாவில் இருந்தன. அவற்றிலிருந்தே கித்தார் உருவானது. மேற்கத்திய “கித்தார்” இசைக்கருவியை ஒத்த கருவிகள் பற்றி சுசா குகை எழுத்தோவியங்களிலும் ரொனியச் சமவெளியில் கண்டு எடுக்கப்பட்டச் சிற்பங்களிலும் காண்கிறோம்.” என நான்  A Journey in Rhythem என்ற கட்டுரையில் நியு இந்தியன் எக்சுபிரசில் 10 செப்டம்பர் 2005 அன்று எழுதினேன்.

“கித்தார்” என்ற மேற்கத்திய நரம்பிசைக் கருவியின் பெயர் கீத் என்ற சமற்கிருதச் சொல்லில் இருந்தும் “தார்” tar என்ற பாரசீகச் சொல்லில் இருந்தும் உருவாயிற்று. பாரசீக மொழியில் “தார்” என்பது நரம்பைக் குறிக்கும். எனவே சமற்கிருதச் சொல்லும் பாரசீகச் சொல்லும் இணைந்து இசையில் சங்கமாயின. இப்படி Guitar என்ற நரம்பிசைக் கருவிக்குப் பெயர் உருவான விதம் பற்றி இசைக் கடல் – இலக்கணச்சுடர் இரா. திருமுருகன் கூறிய விளக்கம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டதால் நியு இந்தியன் எக்சுபிரசு வழி அனைவரும் அறிய முடிந்தது.

 மொழி பெயர்ப்புச் சிக்கல்களுக்கு அறிவியலும் தீர்வு தேட முற்பட்டுள்ள காலத்தில் வாழ்கின்றோம். “ஒவ்வொரு மொழிக்கும் பொருந்தக்கூடிய பொதுவான குறியீட்டு மொழியைக் கண்டெடுத்து அதன் மூலம் உலக மொழிகளுக்கிடையே மொழி பெயர்ப்புச் சிக்கல்களைத் தீர்த்து வைக்க அய்க்கிய நாடுகள் நிறுவனம் 1996 முதல் முயன்று வருகிறது. Universal Networking Language Project  என்ற அனைத்துலக மொழிகள் இணைப்புத் திட்டத்தில் இந்தியா உள்ளிட்ட 18 நாடுகள் தங்கள் பங்களிப்பை நல்கியுள்ளன. அரபி இத்தாலியன் பிரெஞ்சு ஸ்பானி~ போர்த்துகீசு ஆகிய மொழிகளுக்கும் அனைத்துலக இணைப்புக் குறியீட்டு மொழிக்கும் நல்ல இசைவு – இணக்கம் உருவாகிவிட்டது என 2004 ல் நான் எழுதினேன்.

 “குறியீட்டு மொழிக்கும் மேற் சொன்ன மொழிகளுக்கும் ஒத்திசைவு உள்ளதால் ஆங்கிலத்திலிருந்து குறியீட்டு மொழிககு மாற்றி அதிலிருந்துச் சில நொடிகளில் அரபி மொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்ய முடியும். போர்த்துகீசில் இருந்து பிரஞ்சுக்கும் இப்படிக் குறியீட்டு மொழியைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம். இந்த Universal Networking Language புதிய எசுபிராண்டோ என்று போற்றப்படுகிறது. எசுபிராண்டோ என்று அறிஞர்கள் கூடிச் செயற்கையாக ஒரு மொழியை உருவாக்கி இருந்தார்கள். அது போன்று புதிய குறியீட்டு மொழியும் பெயர்பெற்றது. மொழிபெயர்ப்புச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் இக்குறியீட்டு மொழி முதுகெலும்பாகத் திகழ்கிறது” என்று புவி வரலாறு முதல் புதுவை வரலாறு வரை உண்மைகளின் ஊர்வலம் – 8 என்ற தொடரின் 2004 ல் எழுதி இருந்தேன்.

“இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்புச் சிக்கல்களுக்குத் தீர்வு காண பொறி மொழியை – குறியீட்டு மொழியை நமது மொழிகளுடன் ஒத்திசைவு செய்ய அறிஞர்கள் முயன்று வருகின்றனர். மகாராட்டிர மாநிலம் போவையில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜிää கணினிகளுக்கு இந்தியும் மராத்தியும் கற்றுத் தரும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஒரு மொழியை அக்குவேறாகக் கழற்றிப் பார்த்து அடிப்படைக் கட்டமைப்பை புரிந்து கொண்டு கணினியின் பொறி மொழியுடன் பொருத்தும் பணியில் இந்தி மராத்திமொழிகள் வெகுவேகமாக ஈடுபட்டுள்ளன. உலகின் முதன்மொழிக்குச் சொந்தக்காரர்கள் உறங்கிக் கொண்டுள்ளார்கள்” என 2004 ல் சொன்னேன். 2012 ல் மீண்டும் நினைவூட்டுகிறேன்.

பிறமொழி அறிவை வளர்க்க குறிப்பாகப் பிரெஞ்சு மொழியை எளிதில் கற்க Moodle.org என்ற இலவய இணையதளத்தில் உள்ள திறந்தநிலை (open source) ஆவணத்தில் இருக்கும் மென்பொருளைப் பயன்படுத்தி புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் பிரெஞ்சுத் துறைத் தலைவர் ஜெயராஜ் டேனியல் அம்மொழியை கற்றுத்தரும் பாராட்டத்தக்க பணியில் ஈடுபட்டுள்ளார். படி இறக்கம் செய்யக்கூடியதாக உள்ள Moodle 2.0 மொழிச் சேவைப்படி 23 மொழிகளை 80 விழுக்காடு மொழியாக்கம் செய்ய முடியும். 12 மொழிகளை 60 விழுக்காடு  11 மொழிகளை 40  விழுக்காடு 52 மொழிகளை 40  விழுக்காட்டுக்கும் குறைவாகவும்  மொழி பெயர்ப்புச் செய்ய முடியும் என்ற நிலை நிலவுகிறது. தமிழை 70 விழுக்காடு மொழியாக்கஞ் செய்யக் கூடிய மென்பொருள் வந்துவிட்டது.

பிரெஞ்சு அரசின் தேசிய நூலகத்தில் வேறெங்கும் கிடைத்திடாத அரிய தமிழ் ஏடுகள் சுவடிகள்- நூல்கள்-மொழியாக்க நூல்கள் உள்ளன.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட “Dictionary of Technical Terms from English to Tamil  நூல் பற்றித் தமிழ்நாடு திட்டக்குழுத்
துணைத்தலைவராக விளங்கிய முனைவர். மு. நாகநாதன் விதந்து எழுதியுள்ளார்.

ஈடிணையற்ற இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் சிலருள் சிறப்பிடம் பெற்றப் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மருமகனும் புதுவைத் தாகூர் கல்லூரியின் மேனாள் மாணவத்தலைவருமான பக்தவத்சலம் என்ற ப. அருளி உருவாக்கிய அருங்கலைச் சொல்லகராதியே புதுவை மொழிபெயர்ப்பாளர்களில் அவரை முதலிடத்தில் கொண்டு சேர்க்கும் சிறப்புடையது.

மூன்று இலட்சம் அறிவியல்- பொறியியல்- கலைச் சொற்களைத் தமிழாக்கிய அறிஞர் ப. அருளியின் பங்களிப்பு மிகப்பெரிது போற்றற்குரியது. ஓவ்வொரு இலக்கியமும் அதன் மொழிபெயர்ப்பும் உலகப் பண்பாட்டுச் செழுமைக்கும் உறவுக்கும் எத்துணை தூரம் இன்றியமையாததோ அவ்வளவுக்கு அருங்கலைச் சொல் அகராதிகளும் மொழி வளர்ச்சிக்குப் பயன்படக் கூடியவை.

பிற நாட்டு நல்லறிஞருள் முதலிடம் பெறத்தக்கவர் டாக்டர் ஈவா வில்டன்

பிற நாட்டு நல்லறிஞருள் முதலிடம் பெறத்தக்கவர் டாக்டர் ஈவா வில்டன் அவரைப் பற்றி எழுதிடத் தகவல் கேட்டறியச் சென்றால் அவரெழுதிச் சொல்வது கோபாலய்யர் பற்றி! ஈவா வில்டன் ஆற்றியுள்ள ஈடில்லாத் தமிழ்த் தொண்டுக்கு அவரின் வழிகாட்டியாக விளங்கிய நூற்கடல் கோபாலய்யர் தூண்டுகோலாகத் துலங்கியவர். நன்றி மறவா ஈவா வில்டன் நூற்கடலுக்கு முதல்மரியாதை தரச்சொல்வதன் மூலம் தமிழுலகில் போற்றத்தகு பண்புடைய பெருமகளாக நம் மனங்களில் இடம் பெறுகிறார்.

தொலைகிழக்கு நாடுகள் ஆய்வு நிறுவனம் சார்பில் கோபாலய்யர் நினைவு நூலாக ஈவா வில்டன் தொகுத்து வெளியிட்ட Between Preservation and Recreation:Tamil Traditions of Commentary என்ற நூல் கோபாலய்யரின் தமிழ்ப் பணிகளைப் பட்டியல் இடுகின்றது.

 தேவாரத்தைப் பண்முறையில் ஆய்வு செய்து சொற்பிரிப்பு நிறுத்தக் குறிகளுடன் பதிப்பித்தார்.

மாறனகப்பொருளையும் அதன் இலக்கிய நூலான திருப்பதிக் கோவையாரையும் பதிப்பித்தார்.

வீரசோழியத்துக்கு விரிவான விளக்கம் எழுதினார்

தொல்காப்பியத்துக்கும் அதன் உரைகளுக்கும் பிழையற்ற பதிப்பு வெளியிட்டார்.

 தமிழ் இலக்கணப் பேரகராதியை 17 தொகுதியாக வெளியிட்டார்.

பெரிய திருமொழிக்குப் பெரியவாச்சான் பிள்ளை எழுதிய மணிப்பிரவாள நடையில் அமைந்த உரையைத் தமிழாக்கி வெளியிட்டார்.

 ஆலன் டேனியலுக்காக மணிமேகலையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் உதவியவர்.

 ழான் செவியரின் சேனாவரையம் பிரெஞ்சு மொழியாக்கத்துக்கு உதவியவர்.

ஜேம்ஸ் ரயானின் சீவக சிந்தாமணி ஆங்கில மொழியாக்கத்துக்கு உதவியவர்.

கோபாலய்யரின் தமிழ்த் தொண்டு மட்டுமல்ல பிரெஞ்சு அரசு நிறுவனமான தொலைகிழக்கு நாடுகள் ஆய்வு நிறுவனம் புதுச்சேரியில் அமைதியான முறையில் ஆற்றிவரும் தமிழ்ப்பணிகளும் போற்றத்தக்கவை. நன்றியுடன் நினைவு கூரத்தக்கவை. நன்றி மறவா ஈவா வில்டன் தன் தமிழாசிரியரை முதலிடம் தந்து சிறப்பிக்கிறார். ஆனால் ஈவா வில்டனும் தமிழுக்குழைத்தல் பிற நாட்டு நல்லறிஞர் வரிசையில் முதலிடத்தில் வைத்துப் போற்றித்தரும் புகழ்மிகு பெண்மணியே!

டாக்டர் ஈவா வில்டன் செருமானியே இலக்கியம் கற்றவர். தத்துவ வித்தகர்.இந்தியவியல் ஆய்விலும் தேறியவர். டுயூசெல்டார்ப் டியூபின்சென் ஆம்பர்க்ப்பல்கலைக்கழகங்களில் பயின்றவர். 1996ல் Veda: The Circulation of Sacrificial Gifts என்றத் தலைப்பில் வேதங்களைப் பற்றி முனைவர் பட்டத்தை ஆம்பர்க்கு பல்கலைக்கழகத்தில் பெற்றவர்.

நற்றிணையைச் செம்பதிப்பாகக் கொண்டு வந்தமையால் ஈவா வில்டன் பெயரும் வரலாறும் இடம் பெறுவதில் வியப்பில்லை. நற்றிணைச் செம்பதிப்பு மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளது. முதல் தொகுதியில் 200 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

இரண்டாம் தொகுதி 201-400 வரையிலான பாடல்களைக் கொண்டது. மூன்றாம் தொகுதி சொல்லகர நிரலாக வெளிவந்துள்ளது.

இதுவரை தமிழில் வெளிவந்துள்ள 20 குறுந்தொகைப் பதிப்புகளை ஒப்பாய்வு செய்து செம்பதிப்பை 3 தொகுதிகளாக வெளியிட்டவர் டாக்டர் ஈவா. வில்டன்.

ஜே. எல். செவில்லார்டுடன் இணைந்து அகநானூற்றையும் வெளியிட அயராது உழைத்துக் கொண்டிருப்பவர் டாக்டர் ஈவா. வில்டன்.

இப்படி தமிழுக்குத் தொண்டு புரிய இவருக்குத் தூண்டுகோலாக விளங்கியவர் ஆம்பர்க்கு பல்கலைக் கழகப்பேராசிரியர் சீனிவாசன் ஆவார். குறுந்தொகை மொழியாக்கம் ஆய்வேடாக 2002ல் ஆம்பர்க்கு பல்கலைக் கழகத்தில் அளிக்கப்பட்டது. இந்த நூலுக்காக இவர் கலந்தாய்ந்த அறிஞர்கள் பெயரை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவருக்கு வடமொழி கற்பித்த பேராசிரியர் அல்பிரெச்ட் வெசுலா பேராசிரியர் இலம்பர்ட்டு சுமிதாசன் ஆகியோர் இந்தப் பட்டியலில் அடங்குவர்.

பேராசிரியர் டி. ஓபன்சகாயா (ஆம்பர்க்கு) டாக்டர் ழான் லக் செவில்லார்டு (பாரிசு) மற்றும் செய்யுலியலைப் புரிந்து கொள்ள அதிலும் களவு பற்றி அறிய டோக்கியோவில் ஒரு மாதம் தங்கி பேராசிரியர் டி. தகாஆசியிடமும் விளக்கம் பெற்றார். பிரேக்கு நகரில் பேராசிரியர் செ. வாசெக்கு அவர்களிடமும் மாஸ்கோவில் பேராசிரியர் அலெக்ஸாண்டர் துபாய்ன்சுகியிடம் ஆய்வுக்காக அறிவுரை பெற்றதை ஈவா வில்டன் Literary Techniques in Old Tamil Cankam Poetry என்ற ஆய்வேட்டில் பதிவு செய்கிறார்.

சங்க இலக்கியத்தை ஆய்வு செய்ய விளக்கம் அளிக்கக் கூடிய இத்துணைச் சான்றோர்கள் உலகில் இருக்கிறார்கள் என்று நாம் பெருமிதம் கொள்ள முடியும். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தீட்ட ஒரு கால்டுவெல்! குறுந்தொகையைப் செம்பதிப்பு கொண்டுவர ஒரு ஈவா வில்டன்! நற்றிணையை மொழியாக்கம் செய்து நானில மறியச் செய்யவும் ஈவா வில்டன். மொழியாக்க முன்னோடிகள் தமிழுக்குத் தரும் ஊக்கம் தமிழ்நாட்டவர் செய்யத்தவறிய குறைகளை நீக்கும். சோம்பிக்கிடக்கும் தமிழறிஞர்க்கு ஏக்கம் பிறக்கும்! சொந்த மொழிச் சேவையில் பிறநாட்டு நல்லறிஞர் முந்துகிறார் என்ற நிலை நமக்கு அளிக்கட்டும் ஆக்கம்!

  தமிழ்மாமணி நந்திவர்மன்

11000 YEARS AGO CHOZHA PORT POOMPUHAR SUBMERGED IN SEAS

N.Nandhivarman

 Tamilnadu Government had initiated the process of beautification of Poompuhar, the Port town of Chozha Empire. The need to promote cultural tourism is welcome but beautification of existing Poompuhar will not shed light on hidden history of Poompuhar. And we indulge in self boasting about our past without show casing our past with archeological and other evidences acceptable to historians. We have literary evidences and even to parade before the scholarly world we are not having enough translations of all our literature.

 In such a situation let me draw your attention to the archeological find beneath the seas off shore of Poompuhar. National Institute of Oceanography on March 23 of 1991 found the remains of a fort wall in the shape of horse shoe. It was more or less in the shape of letter U. Its length was 85 meters and height was approximately 2 meters. The distance between one edge and other edge in the opening area was 13 meters. Wall was covered by dust settled there over centuries. Though in 1993 this U shaped remnant of a Fort was found offshore of Poompuhar for want of funds no further research or quest was carried out in that zone. The dating of that structure using carbon dating method was said to be of 3rd century B.C. Graham Hancock read from London about this discovery and dating. Any structure close to shore within 2 meters depth could belong to 3rd century B.C, but this structure was below 23 meters, and for this depth sea level must have risen by inundation or sea level rise. Within 3 centuries up to 23 meters sea level could not have risen as found in oceanographic studies.

With doubts lingering in his mind, Graham Hancock flew from London to Bangalore to meet S.R.Rao, who was instrumental is establishing the National Institute of Oceanography as well as the deep sea probe offshore of Poompuhar. The meeting took place in 2001 and the 70 year old S.R.Rao told Graham Hancock. “We are sure that it is a structure built in land and submerged into seas, and we using carbon 14 dating method arrived at that date, but after you pose questions it strikes to me it must be long before 3rd century B.C” But he agreed that oceanographic study to determine the rise of sea level will answer the puzzle over the dating of the submerged U shaped structure. But S.R.Rao admitted that oceanographic study was undertaken in Gulf of Kutch belonging to Gujarat state of India. In 10,000 B.C. the sea level there was 60 meter below current sea level. There has been no such oceanographic study in South India.

 Anyhow the findings of Gulf of Kutch could be more or less applied for Poompuhar in Tamilnadu, The dialogue between Graham Hancock and S.R.Rao is not taken out of context from a fiction but from Graham Hancock’s Underworld: The Mysterious Origins of Civilization published by Penguin in 7 th February 2002. Close on the heels of publication of this book the Channel 4 Television of UK which won Tamils gratitude for exposing Tamil Genocide recently, telecasted on 11, 18 and 25th February 2002 a programme titled Flooded Kingdoms of Ice Age. By this time the Dwaraka found in Gulf of Kutch based on oceanographic study was proclaimed to belong to 7500 B.C and leading journals of India carried cover page stories over that discovery. But the same team that discovered Dwaraka discovered Poompuhar but date was confined to 3rd century B.C.

 The megaphone warriors of Tamilnadu kept silent in their street corner meetings since they don’t know the subject, nor the chosen representatives of people sitting in Parliament raised their voice because they know they are puppets and puppeteers have not given instructions to open their mouth in the Parliament.

 Graham Hancock took up the issue of dating the Poompuhar structure with Glenn Milne of Durham University who prepares inundation maps of the world. The date for a structure to go down in sea or sea level to rise 23 meters was 9500 B.C. Hence 11,000 years ago the Fort beneath Poompuhar Sea must have submerged. The Last Ice Age global warming and sea submergence of lands occurred before 12000 years ago and the submergence of Poompuhar tallied with that world known fact. But no media of Tamilnadu had brought this to light because those who propounded the theory of 3rd century B.C did not share his views. He went to Bangalore to report about Poompuhar, exhibited there and met the press to break the story from there. Such scene is prevalent in Tamilnadu. Scholars may agree or disagree but for a scholar to express his discovery there should be no media black out… Just before the Classical Tamil Conference I wrote in Suryakathir on the Historical Treasures beneath our Seas, and also wrote to then Chief Minister Kalaignar M.Karunanithi whom I personally know urging him to invite Graham Hancock but in vain.

Now that Tamilnadu Government plans to promote historical and cultural tourism, whatever has been found must be placed in a museum and Graham Hancock must be invited to further probe off shore of Poompuhar to unearth sorry to un-sea our past archeological grandeur.